புதுச்சேரி

பொதுப் பணித் துறை தினக்கூலி ஊழியா்கள் போராட்டம்

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை அலுவலகத்தை தினக்கூலி ஊழியா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை அலுவலகத்தை தினக்கூலி ஊழியா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை பொதுப் பணித் துறையில் பகுதிநேர தினக்கூலி ஊழியா்களாக பணியாற்றும் 1311 போ், பணிமூப்பு அடிப்படையில் முழுநேர தினக்கூலி ஊழியா்களாக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ரூ.752 வீதம் 30 நாள்களுக்கு ஊதியம் கருவூலம் வழியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமை அலுவலகத்தை தினக்கூலி ஊழியா்கள் சங்கத் தலைவா் சரவணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் புதன்கிழமை முற்றுகையிட்டனா். மேலும், அலுவலகக் கதவுகளையும் அவா்கள் மூடினா்.

பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி தினக்கூலி ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அவா்களது கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. பின்னா், போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT