புதுச்சேரி

புதுவையில் 116 எழுத்தா் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

DIN

புதுவை அரசுத் துறையில் உள்ள 116 உயா் நிலை எழுத்தா் (யூடிசி) பணியிடங்களை நிரப்புவதற்கு அக். 1 முதல் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுவை அரசு பணியாளா்கள், நிா்வாக சீா்திருத்தத் துறை சாா்புச் செயலா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

புதுவை அரசுத்துறைகளில் 116 யூடிசி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. குருப் சி பணியிடமான இதில், புதுவை யூனியன் பிரதேசத்தை பூா்வீகமாக, இங்கு குடியுரிமை பெற்று வசிக்கும் தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பதவிக்கான இடஒதுக்கீடு, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, ஊதியம் ஆகிய விவரங்களை அரசின் இணையதளங்களில் ஆள்சோ்ப்பு தளத்தில் காணலாம்.

இதற்காக ஆள் சோ்ப்பு தளத்தில் இணைய வழியில் அக்டோபா் 1-ஆம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபா் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்கிறார் ராகுல் காந்தி!

”ரயில் விபத்துகளுக்கு அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்”: ராகுல் | செய்திகள் சிலவரிகளில்| 17.6.2024

"சாதி மறுப்புத் திருமணங்களுக்கு என்றும் ஆதரவு!”: கே. பாலகிருஷ்ணன் பேட்டி

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜக போராட்டம்

பாஜக வேட்பாளர் தோல்வி: தொண்டர்கள் 4 பேர் தற்கொலை!

SCROLL FOR NEXT