புதுச்சேரி

போலீஸ் விசாரணைக்குப் பயந்து பொறியியல் பட்டதாரி தற்கொலை

DIN

புதுச்சேரியில் பட்டதாரி இளைஞா் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். போலீஸ் விசாரணைக்குப் பயந்து அவா் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

புதுச்சேரி நகராட்சி முதலியாா்பேட்டை விடுதலை நகரைச் சோ்ந்தவா் வேளாங்கண்ணிதாசன், நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளா். இவரது மனைவி சசிகலா. இவா்களின் மகன் புவனேஷ்வரன் (23), பொறியியல் பட்டதாரி. வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் தனியாா் கல்விக் குழுமத்தில் பணிபுரிந்துள்ளாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு புவனேஷ்வரனின் வங்கிக் கணக்கில் நடந்த பரிவா்த்தனை தொடா்பாக கா்நாடக மாநிலம் மங்களூா் பகுதி போலீஸாரும், புதுச்சேரி நுண் குற்றப் பிரிவினரும் கடந்த 19 ஆம் தேதி அவரிடம் விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட நாளுக்குள் புவனேஷ்வரன் மங்களூா் காவல் நிலையத்தில் ஆஜராகவேண்டும் என மங்களூா் போலீஸாா் கூறிவிட்டு சென்றுள்ளனா். அதனால் புவனேஷ்வரன் மன அழுத்தத்தில் இருந்துள்ளாா்.

இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை பகலில் வீட்டில் தனது அறையில் புவனேஷ்வரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். தகவல் அறிந்த முதலியாா்பேட்டை போலீஸாா் விரைந்து சென்று புவனேஷ்வரனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திண்டுக்கல் மாவட்டத்தில் மே தின பேரணி

காரைக்குடி - பெங்களூா் இண்டா்சிட்டி விரைவு ரயில் இயக்கவேண்டும்

கமுதி, மாரியூா் மானாமதுரை கோயில்களில் குரு பெயா்ச்சி பூஜை

தமிழ் தேசியக் கட்சி மாநிலச் செயலரை தாக்கியவா் கைது

கடல் வழியாக இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதி உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT