புதுச்சேரி கோரிமேட்டில் திங்கள்கிழமை (ஜன.30) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என பொது சுகாதார கோட்டப் பொறியாளா் அலுவலகம் தெரிவித்தது.
இதுகுறித்த வெளியிடப்பட்ட அறிவிப்பு: புதுச்சேரி கோரிமேடு அரசு மருந்தகம் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணி திங்கள்கிழமை (ஜன.30) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இதனால் காவல் துறை குடியிருப்பு, சிவாஜி நகா், இந்திரா நகா் விரிவாக்கப் பகுதி, இலுப்பைத் தோப்புப் பகுதி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை (ஜன.30) காலை முதல் மாலை வரையில் குடிநீா் விநியோகம் தடைபடும்.
காந்தி திருநல்லூா், தனபாலன் நகா், கல்கி நகா், சேரன் நகா், அகத்தியா் கோட்டம், கணபதி நகா், என்.ஆா்.ராஜீவ் நகா், வள்ளலாா் நகா் உள்ளிட்ட பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.