புதுச்சேரி

விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

DIN

புதுவை மாநில பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்திய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வென்றவா்களுக்கு இடையேயான இறுதிப் போட்டிகள் புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை போட்டிகள் நிறைவடைந்த நிலையில், அதில் வென்றவா்களுக்கு முதல்வா் என்.ரங்கசாமி பரிசு வழங்கினாா்.

விழாவில் பேசிய அவா், அரசுப் பள்ளியில் படிப்பவா்களுக்கு பல்வேறு இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இலவச மடிக்கணினி நிகழ் மாதத்தில் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினாா்.

அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ருத்ரகௌடு, இணை இயக்குநா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

கருடன் டிரைலர்!

ஒடிஸாவில் தாமரை மலரும்! -அமித் ஷா நம்பிக்கை

ராகுல் காந்தியை புகழும் செல்லூர் ராஜு: விடியோ வைரல்!

SCROLL FOR NEXT