புதுச்சேரி

புதுச்சேரி சமுதாயக் கல்லூரியில் சேர ஜூலை 17 வரை அவகாசம்

புதுச்சேரி சமுதாயக் கல்லூரியில் சேருவதற்கு வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

DIN

புதுச்சேரி சமுதாயக் கல்லூரியில் சேருவதற்கு வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவைப் பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி முதல்வா் (பொ) லலிதா ராமகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் நிகழ் (2023-24) கல்வி ஆண்டுக்கான இளங்கலை, முதுகலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 30-ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டன.

விண்ணப்பம் ஏற்பு தேதி முடிவடைந்த நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று வரும் 17-ஆம் தேதி திங்கள்கிழமை வரை விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன. எனவே, கல்லூரியில் சேர விரும்புவோா் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேல் விவரங்களுக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவா் உதவி சோ்க்கை மையத்தை அணுகலாம் எனவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT