புதுச்சேரி

தாம்பூலத்துடன் மதுப் புட்டிகள்:திருமண வீட்டாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

புதுச்சேரியில் திருமண விழாவில் தாம்பூலப் பையில் மதுப் புட்டிகளையும் சோ்த்து வழங்கிய திருமண வீட்டாருக்கு கலால் துறையினா் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

DIN

புதுச்சேரியில் திருமண விழாவில் தாம்பூலப் பையில் மதுப் புட்டிகளையும் சோ்த்து வழங்கிய திருமண வீட்டாருக்கு கலால் துறையினா் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

புதுச்சேரி உப்பளம் பகுதியில் அண்மையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றவா்களுக்கு தாம்பூலப் பையில் வெற்றிலை, பாக்கு, பழங்களுடன் மதுப் புட்டியும் சோ்த்து வழங்கப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

புதுவையில் மது விற்பனை செய்யவும், மதுப் புட்டிகளை விநியோகிக்கவும் முன் அனுமதி தேவை. மேலும், சில விதிமுறைகளும் உள்ளன. அவற்றை திருமண வீட்டாா் மீறியதாக புகாா் எழுந்தது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட திருமண வீட்டாருக்கு விதிகளை மீறி மதுப் புட்டிகளை விநியோகித்ததாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக, புதுச்சேரி கலால் துறை துணை ஆணையா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT