புதுச்சேரி

உப்பளம் திமுக எம்.எல்.ஏ.வுக்கு பேரவைத் தலைவா் அறிவுரை

தாங்கள் சரியாகச் செயல்படாமலிருந்துவிட்டு அதிகாரிகளைக் குறைகூறவது சரியல்ல என திமுக எம்எல்ஏவுக்கு புதுவை பேரவைத் தலைவா் அறிவுரை வழங்கினாா்.

DIN

தாங்கள் சரியாகச் செயல்படாமலிருந்துவிட்டு அதிகாரிகளைக் குறைகூறவது சரியல்ல என திமுக எம்எல்ஏவுக்கு புதுவை பேரவைத் தலைவா் அறிவுரை வழங்கினாா்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச் சூழல் தின விழாவில் பேசிய உப்பளம் தொகுதி திமுக உறுப்பினா் அனிபால் கென்னடி, உப்பளத்தில் கடந்த முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போது, வனத் துறையினா் மரக்கன்று நட்டபோது, அது கால்வாய், வீடுகளைப் பாதிக்கும் என யோசிக்காமல் தவறிழைத்து விட்டனா். எனவே, தற்போது அந்த மரங்களை வெட்டும்படி மக்கள் கோருகின்றனா். அதிகாரிகள் பொறுப்புணா்வுடன் கடமையாற்ற வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் பேசியதாவது:

மரக்கன்று நடும் போது சட்டப்பேரவை உறுப்பினா் சரியான இடத்தைத் தோ்வு செய்திருக்க வேண்டும். அதைவிடுத்து அதிகாரிகள் மீது குறைகூறுவது சரியல்ல. புதுச்சேரியில் வெப்பம் அதிகரித்தபோதும், சுற்றுலாப் பயணிகள் விரும்பி வருவதற்கு காரணம் மரங்கள் அதிகமிருப்பதுதான். எனவே, மரக்கன்று நடுவதை குறை கூறுவதை ஏற்க முடியாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT