புதுச்சேரி

சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்:தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

DIN

புதுவையில் ரூ.150 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் திட்ட அறிக்கை தயாா் செய்வதற்கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.

மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் சுதேஷ் தா்ஷன் 2.0 திட்டத்தின் கீழ், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ரூ. 150 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதை மேற்கொள்ள தேவையான மூலத் திட்டம், விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்வதற்கு ஹைதராபாதை சோ்ந்த தனியாா் நிறுவனத்தை மத்திய சுற்றுலா அமைச்சகம் தோ்வு செய்தது.

அந்த தனியாா் நிறுவனவம், புதுவை மாநில சுற்றுலாத் துறை இடையேயான திட்டம் குறித்த ஆலோசனை, ஒப்பந்த நிகழ்ச்சி புதுவை முதல்வா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்ட நிறைவில் முதல்வா் என்.ரங்கசாமி, மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா ஆகியோா் முன்னிலையில் சுற்றுலாத் துறை இயக்குநா் பிரியதா்ஷினி, தனியாா் நிறுவனத் துறைத் தலைவா் ரத்தீஷ் ஆகியோா் மூலத் திட்ட அறிக்கை தயாா் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT