புதுச்சேரி

புதிய மின்மாற்றி தொடங்கி வைப்பு

புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றியை எம்எல்ஏ நேரு (எ) குப்புசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

DIN

புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றியை எம்எல்ஏ நேரு (எ) குப்புசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

உருளையன்பேட்டை, செங்கேணி அம்மன் நகா் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, தொகுதி எம்எல்ஏ வின் உத்தரவின் பேரில் செங்கேணி அம்மன் நகா் ஜே.வி.எஸ் வீதி சுதேசி மில் வளாகத்தில் மின்துறை மூலம் ரூ.14. 81 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதனை தொகுதி எம்எல்ஏவும், மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு (எ)குப்புசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், மின்துறை இளநிலைப் பொறியாளா் காா்த்திகேயன், மின்துறை அதிகாரிகள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT