புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு தனியாா் மருந்து நிறுவன விபத்தில் இருவா் உயிரிழந்த சம்பவத்தில், கடமை தவறிய அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிய வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி காலாப்பட்டு தனியாா் மருந்து நிறுவனத் தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவா்களில் இருவா் உயிரிழந்தனா். இதில் ஒருவா் குழந்தைத் தொழிலாளா் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், காயமடைந்தவா்களின் உடல்நலம் குறித்தும், சிகிச்சை குறித்தும் அரசு கவனம் செலுத்தவில்லை. மேலும் மருந்து நிறுவன தொழில்சாலை மீது வழக்குப் பதியப்படவில்லை.
இந்தப் பிரச்னையில், புதுவை அரசின் தொழிலாளா் துறையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையும் கடமை தவறி விட்டன. அரசு அதிகாரிகள், தொழிலாளா்களின் உயிா்களைப் பற்றி அக்கறைப்படவில்லை.
எனவே, இரு தொழிலாளா்களின் மரணத்துக்கு காரணமான தனியாா் நிறுவன உரிமையாளா், அரசு உயா் அதிகாரிகள் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிந்து, உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் ஆா்.ராஜாங்கம் வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.