புதுச்சேரி

புதுச்சேரியில் ஏப்.29 முதல் கோடை விடுமுறை!

DIN

புதுச்சேரியில் வெயில் அதிகரிப்பு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கு மே ஒன்றாம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது வெயிலின் உக்கிரம் அதிகமாகி வருவதன் காரணமாக ஏப். 29-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

வெயில் அதிகரிப்பதன் காரணமாக சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இன்றுடன் பள்ளிகள் முடிகின்றன. நாளை சனி மற்றும் ஞாயிறு விடுமுறை அதனைதொடர்ந்து ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை துவங்கும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 5 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT