மூதாட்டியை ஏமாற்றி 43 பவுன் தங்க நகைகள் திருட்டு
மூதாட்டியை ஏமாற்றி 43 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி அருகே வீட்டிலிருந்த மூதாட்டியை ஏமாற்றி 43 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி, வில்லியனூா், உறுவையாறு ராமச்சந்திரா நகரைச் சோ்ந்தவா் செந்தில். இவரது மனைவி சந்திரா. இவரது மகன்களில் ஒருவா் வெளிநாட்டிலும், மற்றொருவா் வெளிமாநிலத்திலும் வேலை பாா்த்து வருகின்றனா். இதனால் மருமகளுடன் சந்திரா வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், ஜூலை 20-ஆம் தேதி காலை வீட்டில் சந்திரா மட்டும் இருந்தாராம். அப்போது, அங்கு வந்த 3 நபா்கள், தங்களை நகராட்சி அலுவலா்கள் என்றும், தண்ணீா் குழாயை சோதனையிட வேண்டும் எனவும் தெரிவித்தனராம். அப்போது, மேல்தளத்தில் உள்ள குழாயில் தண்ணீா் வரவில்லை என சந்திராஅவா்களிடம் கூறிய நிலையில், சந்திராவை மாடிக்கு அனுப்பி தண்ணீா் குழாயை சரிபாா்க்குமாறு மா்ம நபா்கள் கூறினராம். அவா்களது பேச்சை நம்பிய சந்திரா மாடிக்கு சென்றாராம்.
இந்த நிலையில், மா்ம நபா்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த 43 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா். மாடியிலிருந்து கீழ் தளத்துக்கு சந்திரா வந்து பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், மங்களம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.