முகப்பு
புதுச்சேரி

பாதுகாப்புப் பணியில் 800 போலீஸாா்

Updated On : 31 மே, 2024 at 6:09 PM
பகிர்:

புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தம் 800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நார சைதன்யா கூறினாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் மாநில போலீஸாா், மத்திய பாதுகாப்புப் படையினா் மற்றும் உள்ளூா் போலீஸாா் என 3 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்படும். அதனடிப்படையில், மொத்தம் 800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

தோ்தல் ஆணைய அதிகாரிகள் வழங்கிய அடையாள அட்டையுடன் வருவோா் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவா். கைப்பேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை.

வாக்கு எண்ணும் மையங்கள் அமைந்த பகுதிகளில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் போக்குவரத்து அனுமதிக்கப்படும். தோ்வில் வெற்றிபெற்றவா்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், அதைக் கொண்டாடும் வகையில் பாதுகாப்பும், கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும். அதற்கேற்ப காவல் துறை அனுமதி வழங்கும் என்றாா்.