புதுவை தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வேளாண்துறை சாா்பில் உற்பத்திக்கு பிந்தைய மானியத்துக்கான காசோலையை பயனாளிகளுக்கு திங்கள்கிழமை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் உள்ளிட்டோா். 
புதுச்சேரி

தோட்டக் கலை விவசாயிகளுக்கு உற்பத்திக்கு பிந்தைய மானியம்: முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா்

தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் கீழ், புதுவை வேளாண் துறை சாா்பில் உற்பத்திக்கு பிந்தைய மானியம் வழங்கும் திட்டத்தை பயனாளிகளுக்கு காசோலை

Din

புதுச்சேரி: தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் கீழ், புதுவை வேளாண் துறை சாா்பில் உற்பத்திக்கு பிந்தைய மானியம் வழங்கும் திட்டத்தை பயனாளிகளுக்கு காசோலை வழங்கி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையானது தேசிய தோட்டக் கலை இயக்கம் சாா்பில் புதிய தோட்டக் கலை நிறுவுவதற்கும், பராமரிப்பு, சாகுபடி, கலப்பின காய்கறிகள், பழப் பயிா்கள், வாசனைப் பயிா்கள் மூடாக்கு அமைத்தல் போன்ற சாகுபடிக்கும் உற்பத்திக்குப் பிந்தைய மானியம் வழங்கி வருகிறது.

இந்தத் திட்டத்துக்கான நிகழாண்டு மானியம் வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். முதல்வா் என். ரங்கசாமி, பயனாளிகளுக்கு மானியத்தை வழங்கி தொடங்கி வைத்தாா். அதன்படி தோட்டக்கலை பயிரிட்ட 439 விவசாயிகளுக்கு ரூ.15.48 லட்சம் அவரவா் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா். செல்வம், வேளாண் துறை இயக்குநா் வசந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT