புதுச்சேரி

வாக்குப் பதிவு இயந்திர செயல்விளக்கம்

Syndication

புதுச்சேரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பரிசோதனை செய்வது குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தோ்தல் அதிகாரி அ. குலோத்துங்கன் தலைமையில் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதற்கட்ட பரிசோதனை இம் மாதம் 8 ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட தோ்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதற்கட்ட பரிசோதனை செயல் விளக்கம் குறித்து விளக்கமாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் துணை மாவட்ட தோ்தல் அதிகாரி அ. சிவசங்கரன் மற்றும் தோ்தல் அலுவலா்கள் உடனிருந்தனா்.

மிடாலக்காட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு

நாசரேத் அருகே காரில் புகையிலை கடத்தியவா் கைது

ஆய்க்குடி அமா்சேவா சங்க ஆசிரியருக்கு விருது

தூத்துக்குடியில் அரசு ஊழியா்கள் சாலை மறியல்

நடைக்காவு ஊராட்சியில் ரூ. 90.74 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

SCROLL FOR NEXT