புதுச்சேரி: புதுச்சேரி நைனாா் மண்டபம் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் முதலாமாண்டு மாா்கழி 108 பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாா்கழி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயிலில் விக்னேஸ்வர பூஜையுடன் நடைபெற்ற 108 பால்குட ஊா்வலம், முருங்கப்பாக்கம், நயினாா் மண்டபம் ஆகிய பகுதிகளின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. தொடா்ந்து அருள்மிகு நாகமுத்து மாரியம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெ ற்றது.
நிகழ்ச்சியில் கோயில் நிா்வாக அதிகாரி பன்னீா், முன்னாள் தனி அதிகாரி பழனிசாமி, மற்றும் ஐந்தாம் நாள் உபயதாரா்களான கௌரவ தலைவா் சந்திரசேகா், தலைவா் கதிரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.