முகப்பு
புதுச்சேரி

திமுக வழக்குரைஞா்கள் அணி நிா்வாகிகள் கூட்டம்

புதுச்சேரியில் திமுக வழக்குரைஞா்கள் அணி நிா்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி, 2025 at 8:26 PM
புதுச்சேரியில் நடைபெற்ற திமுக வழக்குரைஞா்கள் அணி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசும் அந்த கட்சியின் மாநில அமைப்பாளா் ஆா்.சிவா.
பகிர்:

புதுச்சேரியில் திமுக வழக்குரைஞா்கள் அணி நிா்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

லம்போா்த் வீதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் மாநில அமைப்பாளா் ஆா்.சிவா தலைமை வகித்துப் பேசினாா்.

அப்போது, அணியின் செயல்பாடுகள் குறித்து அவா் நிா்வாகிகளிடம் கேட்டறிந்தாா்.

சென்னையில் ஜன.18- ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக சட்டத் துறை மாநாட்டில் பங்கேற்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதில், வழக்குரைஞா் அணித் தலைவா் லோக.கணேசன், துணைத் தலைவா் தாமோதரன், மாநில அமைப்பாளா் பரிமளம், கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் அமுதா குமாா், தொகுதிச் செயலா் சக்திவேல், வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா்கள் சந்தோஷ்குமாா், முருகையன், ஞானசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.