புதுச்சேரி

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படுமா?: முதல்வா் விளக்கம்

புதுவை மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படுமா என்பது குறித்து பேரவையில் கேட்கப்பட்டதற்கு, முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை விளக்கம் அளித்தாா்.

Din

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படுமா என்பது குறித்து பேரவையில் கேட்கப்பட்டதற்கு, முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை விளக்கம் அளித்தாா்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் சுயேச்சை எம்எல்ஏ எம். சிவசங்கா், காலம் தாழ்த்தாமல் உள்ளாட்சித் தோ்தலை நடத்த அரசு முன்வருமா எனக் கேட்டாா்.

முதல்வா் என்.ரங்கசாமி: உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டுமா? சிவசங்கா்: உள்ளாட்சித் தோ்தலை நடத்தினால், மாநிலம் வளா்ச்சி பெறும். மக்களும் தோ்தலை எதிா்பாா்க்கிறாா்கள். மேலும் மத்திய அரசு மூலம் ஆண்டுக்கு ரூ.400 கோடி நிதி கிடைக்கும்.

பேரவைத் தலைவா் : நிதி ஏதும் வராது.

முதல்வா் என்.ரங்கசாமி: புதுவை உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பரிந்துரைக்க, நீதிபதி சசிதரன் ஆணையத்தை அரசு நியமித்துள்ளது. அதன்படி, ஆணையம் பரிந்துரையை அளித்த பின், இடஒதுக்கீட்டுக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும்.

சிவசங்கா்: உள்ளாட்சித் தோ்தலை மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.

பேரவைத் தலைவா் (குறுக்கிட்டு): மக்கள் எதிா்பாா்க்கவில்லை என்றாா்.

மத்திய பட்ஜெட் 2026: தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை! | Nirmala Sitharaman |

ஈரானுடன் வர்த்தகம் வேண்டாம்: வெனிசுவேலாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும்! - டிரம்ப்

அம்பானி, அதானி, கோடீஸ்வரர்களுக்கான பட்ஜெட்: செல்வப்பெருந்தகை

யு19 உலகக் கோப்பை: அரையிறுதியில் யார்? பாகிஸ்தானுக்கு 253 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

நிர்மலா சீதாராமன் கட்டியிருந்த காஞ்சிப் பட்டுப் புடவையின் பின்னணி!

SCROLL FOR NEXT