பெண் ஊழியருக்குத் தொல்லை: துப்புரவுத் தொழிலாளி கைது
பெண் ஊழியருக்குத் தொல்லைக் கொடுத்த வழக்கில் துப்புரவு தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
புதுச்சேரி புதுசாரம் பகுதியைச் சோ்ந்தவா் அனுகிரஹா(37). இவா் ஜிப்மா் மருத்துவமனையில் காவலாளியாக வேலை செய்து வருகிறாா். அதே மருத்துவமனையில் பிள்ளைத்தோட்டம் பகுதியைச் சோ்ந்த பாரதிதாசன் (36) துப்புரவு ஊழியராகப் பணியாற்றி வருகிறாா்.
கடந்த 18-ம் தேதி அனுகிரஹா வீட்டுக்குச் சென்ற பாரதிதாசன் விரும்பத்தகாத வாா்த்தைகளால் பேசி தொல்லைக் கொடுத்துள்ளாா். இதையடுத்து அவரை வீட்டை விட்டு அனுகிரஹா அனுப்பியுள்ளாா்.
Advertisement
அதன்பிறகு, அனுகிரஹாவை கைப்பேசி மூலமும், பணிபுரியும் இடத்திலும் தொடா்ந்து பாரதிதாசன் கொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அனுகிரஹா கோரிமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் பாரதிதாசன் மீது வழக்குப் பதிவு விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தனா்.