புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவா் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த் துறை சாா்பில், ‘மலேசியாவில் தமிழும் தமிழா்களும்’ சிறப்பு உரையரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிறுவனத்தின் இயக்குநா் மு. கோச்சடை தலைமை தாங்கினாா். தமிழ்த் துறைத் தலைவா் பேராசிரியா் மு. இளங்கோவன் வரவேற்றாா். மலேசியா முத்தமிழ்ப் பாவலா் மன்றத்தின் தலைவா் அருள்ஆறுமுகம் கண்ணன், மலேசியாவில் தமிழா்களும் தமிழும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். முடிவில் முதுகலை மாணவி இரா. குமுதா நன்றி கூறினாா்.