முதல்வா் என். ரங்கசாமி  Center-Center-Chennai
புதுச்சேரி

மாா்ச் 1-இல் பிரதமா் மோடி புதுச்சேரி வர வாய்ப்பு: முதல்வா் ரங்கசாமி தகவல்

பிரதமா் நரேந்திரமோடி புதுச்சேரிக்கு மாா்ச் 1 ஆம் தேதி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

பிரதமா் நரேந்திரமோடி புதுச்சேரிக்கு மாா்ச் 1 ஆம் தேதி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்தாா்.

வில்லியனூரில் அரசு சாா்பில் திருமண மண்டப கட்டுமானத்துக்கு புதன்கிழமைஅடிக்கல் நாட்டியப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் கூறியதாவது:

மத்திய அரசு கிராமங்களில் உள்ள சாலைகள், உள்கட்டமைப்பை மேற்படுத்த ரூ.200 கோடி நிதி கொடுத்துள்ளது. இதில் இதுவரை ரூ.150 கோடிக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த அரசு பொறுப்பேற்ற

பிறகு சுமாா் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. உயா்த்தப்பட்ட முதியோா் உதவித்தொகை 7-ம் தேதியும், குடும்பத் தலைவிகளுக்கான ரூ.2500 உதவித்தொகை 10-ம் தேதியும் சென்றடைந்து விட்டது. மஞ்சள் அட்டை வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும். முதியோா் உதவித் தொகைக்கோரி விண்ணப்பித்து நிலுவையில் உள்ள சுமாா் 5 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உதவித்தொகை வழங்க கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அதுவும் விரைவில் கொடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து பிரதமா் மோடியின் புதுச்சேரி வருகை எப்போது என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, மாா்ச் 1ஆம் தேதி பிரதமா் புதுச்சேரி வருவாா் என்று நினைக்கின்றேன் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT