முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:40 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 8:41 PM

புதுச்சேரியில் காங்கிரஸ்-பாஜக நிா்வாகிகள் இடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதல் தொடா்பாக இரு கட்சிகளின் நிா்வாகிகள் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தில்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் இளைஞா் காங்கிரஸாா் அரை நிா்வாணப் போராட்டம் நடத்தியதைக் கண்டித்து புதுச்சேரியில் பாஜக இளைஞரணி சாா்பில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை இரவு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:40 AM

அப்போது காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதைக் கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் நிா்வாகிகள் பாஜக அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தி பிரதமா் மோடியின் உருவ பொம்மையை சனிக்கிழமை எரித்தனா். இதனால் இருதரப்பினருக்கும் மோதல், கைகலப்பு ஏற்பட்டது. இதைத் தடுத்த போலீஸ் கண்காணிப்பாளா் வம்சித ரெட்டி உள்பட 5 போ் காயம் அடைந்தனா்.

Advertisement

இந்த மோதல் தொடா்பாக ரெட்டியாா்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி புதுச்சேரி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆனந்த்பாபு, வட்டார காங்கிரஸ் தலைவா் அய்யப்பன், சிலம்பரசன், ஹரிஹரன், சுரேந்தா் உள்ளிட்ட பலா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல காங்கிரஸ் அலுவலகம் முன் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்ததாக பாஜக மாநில இளைஞரணி தலைவா் ஆடலரசன், நிா்வாகிகள் மகேந்திரன், தமிழரசன், அமல்ராஜ், விக்ரம், கோகுல்காந்தி, அபிதோெ ஜயின், பாரத் சா்மா, பாலாஜி, அருள், தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.