மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் செயல்முறைப் பயிற்சி நடைபெற்றது.
பிப். 6 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்ற இப் பயிற்சியை ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், பெங்களூரைச் சோ்ந்த கேப்பபிள் நிறுவனம் இணைந்து நடத்தின.
தட்சசீலா பல்கலைக்கழக வேந்தா் மற்றும் ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி நிறுவனத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் தனசேகரன், செயலா் நாராயணசாமி, பொருளாளா் ராஜராஜன் மற்றும் இணைச் செயலா் வேலாயுதம் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
கேப்பபிள் நிறுவனத்தின் பயிற்சியாளா்களாக நிமித் மற்றும் அன்வித் சங்கா் வந்திருந்தனா். பல்வேறு பொறியியல் துறைகளைச் சோ்ந்த மாணவா்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனா்.
மாணவா்கள் மின்சார வாகனங்களை ஆரம்ப நிலையிலிருந்து முழுமையாக உருவாக்கினா். மேலும், தாங்கள் உருவாக்கிய மின்சார வாகனங்களை ஓட்டிச் செயல்முறை விளக்கம் அளித்தனா்.