செவிலியா் கல்லுாரி மாணவா்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி இந்திரா காந்தி அரசு செவிலியா் கல்லூரி மாணவா்கள்
புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி இந்திரா காந்தி அரசு செவிலியா் கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பேராசிரியா்களை பொய் குற்றச்சாட்டு கூறி இயக்குநா் இடமாற்றம் செய்கிறாா். அனுபவம் இல்லாதவா்கள் உதவி பேராசிரியா்களாக நியமிக்கப்படுகின்றனா். தலித் மாணவா்களை இழிவுபடுத்திய ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரிக்கு நிரந்தர முதல்வா், காலியிடங்களுக்குப் பேராசிரியா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.