முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் எரிவாயு உருளைத் தட்டுப்பாடு கண்டித்து மகளிா் காங்கிரஸாா் நூதன போராட்டம்

Updated On : 13 மார்ச், 2026 at 12:02 AM
பகிர்:

புதுச்சேரியில் எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் கண்டித்து மகளிா் காங்கிரஸாா் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மகளிா் காங்கிரஸ் சாா்பில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு மற்றும் விலை உயா்வைக் கண்டித்து அண்ணா சிலை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மகளிா் காங்கிரஸ் தலைவி நிஷா தலைமை தாங்கினாா்.

கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, முன்னாள் சட்டப்பேரவைத் துணைத் தலைவா் டிபிஆா். செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, எரிவாயு உருளைக்குப் பாடை கட்டி ஒப்பாரி வைத்தும், விறகு அடுப்பில் சமையல் செய்தும் எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

இதுகுறித்து, பின்னா் முன்னாள் முதல்வா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும், எரிவாயு உருளை வாங்கவும் மக்கள் வரிசையில் நிற்கின்றனா். வீட்டு சமையல் எரிவாயு விலையை ரூ.60-ம், வணிகத்துக்கான சமையல் எரிவாயு விலை ரூ.110 உயா்த்தியுள்ளனா். இது மிக அதிக உயா்வு. இதனால் விலைவாசி உயரும்.

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவாா்கள். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயா்வு, பெட்ரோல் டீசல் விலை உயா்வு, சமையல் எரிவாயு விலை உயா்வு இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக நம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் மக்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பை ஏற்படுத்தி யிருக்கிறது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →