முகப்பு
புதுச்சேரி

தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது

தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 18 மார்ச், 2026 at 6:51 PM
கைது
பகிர்:

தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பாகூா் கொம்யூன் சேலியமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு (எ) பிரபாகரன் (32). இவா், கொலை முயற்சி, அடிதடி போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்துள்ளாா். இதையடுத்து, தெற்குப் பகுதி எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன் தடுப்புக் காவல் சட்டத்தில் பிரபாகரனை கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்திருந்தாா்.

அதை ஏற்று ஆட்சியா் அ. குலோத்துங்கன், பிரபாகரனை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில் பாகூா் உதவி ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில் போலீஸாா் பிரபாகரனை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →