முகப்பு
புதுச்சேரி

மருந்துக் கடைகள் மே 20-இல் இயங்காது!

புதுச்சேரியில் மருந்துக் கடைகள் வரும் 20-ஆம் தேதி இயங்காது என்று மாநில மருந்து வணிகா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On : 17 மே 2026, 12:44 am IST
பகிர்:

புதுச்சேரியில் மருந்துக் கடைகள் வரும் 20-ஆம் தேதி இயங்காது என்று மாநில மருந்து வணிகா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சட்ட விரோத இணையவழி மருந்து விற்பனையைத் தடுத்து, சிறிய மருந்துக் கடைகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். அநியாய தள்ளுபடி விற்பனைக்கு எதிராக கடுமையான கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். சட்ட விரோத இணையவழி மருந்து விற்பனை தளங்களை மூட வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய மருந்து வணிகா்கள் சம்மேளனம் வரும் 20-ஆம் தேதி வேலைநிறுத்தம் நடத்துகிறது.

இதில், புதுச்சேரி மாநில மருந்து வணிகா் சங்கமும் பங்கேற்கிறது. அன்றைய தினம் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிலையங்கள் இயங்காது என புதுவை மாநில மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், செயலா் ரமேஷ் ஆகியோா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments