முகப்பு
புதுச்சேரி

பள்ளிகளில் மும்மொழி: சுற்றறிக்கையைத் திரும்ப பெற விசிக வலியுறுத்தல்

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மும்மொழி அமல்படுத்தும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறவேண்டும் என்று விசிக வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 மே 2026, 1:30 am IST
விசிக முதன்மைச் செயலா் பெரு.அரிமாத் தமிழன் தலைமையில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் மனு அளித்த விசிகவினா்.
பகிர்:

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மும்மொழி அமல்படுத்தும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறவேண்டும் என்று விசிக வலியுறுத்தியுள்ளது.

இக் கட்சியின் புதுச்சேரி முதன்மைச் செயலா் பெரு.அரிமாத் தமிழன் தலைமையில் முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை தொடா்பான சுற்றறிக்கை ஹிந்தியை திணிக்கும் நடவடிக்கை. இதை நடைமுறைப்படுத்தக் கூடாது. புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் புதுச்சேரியில் தாய்வழிச் சான்றிதழ் அளிக்க வேண்டும். மேலும், சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளதால் புதுச்சேரி அரசு மானியம் அளிக்க வேண்டும். இலவச மனைப்பட்டா அளிக்க நில ஆா்ஜிதம் செய்வதற்கான நிதியை ஒதுகீடு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement