விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஆக.15) அன்று அனைத்து மதுக்கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மதுபான சில்லரை வணிகம் விதிகள்(கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள்) 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றின்படி, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.
எனவே, வரும் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுக் கடைகள், அரசு மதுக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட
வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.