விழுப்புரத்தில் போலீஸாரை மிரட்டிய ரௌடி கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் நகர காவல் உதவி ஆய்வாளர் பாலசிங்கம் மற்றும் போலீஸார் வெள்ளிக்கிழமை மாலை மருதூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சாலையை ஆக்கிரமித்து நின்ற கீழ்ப்பெரும்பாக்கம் ஒளவையார் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுக்கு சுரேஷ் (31) என்ற ரெளடி போலீஸாரிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, சுக்குசுரேஷை, விழுப்புரம் நகர போலீஸார் கைது செய்தனர்.