கள்ளக்குறிச்சியை அடுத்த சித்தலூரில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இக்கோயிலில் அமாவாசை தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், புற்றுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம்.
அதே போல வைகாசி அமாவாசையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் செய்து வண்ண, வண்ண மலர்களால் அலங்காரம் செய்து 108 மூலமந்திரங்களைக் கூறி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பின்னர், அம்மனை கோயிலைச் சுற்றி வலம் வந்தனர். கோயில் வளாகத்தில் ஊஞ்சல் கட்டி வைத்திருந்தனர். அதில், அம்மனை வைத்து பெண்கள் அம்மன் பாடல்களைப் பாடினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.