திண்டிவனம் அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 12 கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
திண்டிவனம் அருகே சாரம் கிராமத்தில் வியாழக்கிழமை பிற்பகல் மின்கசிவு காரணமாக கிருஷ்ணன் என்பவரின் வீட்டில் தீ பிடித்தது. அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.
இந்த தீ மளமளவென பரவி அருகில் இருந்த சாரங்கபாணி, சந்திரகுமார், எல்லப்பன், லட்சுமணன், பாக்யராஜ் உள்ளிட்ட 12 பேரின் வீடுகளுக்கும் பரவியது. இதில், அந்த வீடுகள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்த திண்டிவனம் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து, நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள், ஆவணங்கள் போன்றவை எரிந்து சேதமாகின. இதனைத் தொடர்ந்து, திண்டிவனம் கோட்டாட்சியர் பிரபு சங்கர், டிஎஸ்பி திருமால் உள்ளிடோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு, அரசு சார்பில் உதவித்தொகை, அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி சேலை போன்ற நிவாரண உதவிகளை வருவாய்த்துறையினர் வழங்கினர்.