விழுப்புரம்

ராஜாம்புலியூரில் மக்கள் தொடர்பு முகாம்

DIN

செஞ்சி வட்டம், ராஜாம்புலியூர் கிராமத்தில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செஞ்சி வட்டாட்சியர் பிரபு (பொ) தலைமை வகித்தார். மயிலம் எம்எல்ஏ மாசிலாமணி பொது மக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றார்.
வருவாய் ஆய்வாளர் வரலட்சுமி, வல்லம் தெற்கு ஒன்றியச் செயலர் மொடையூர்துரை, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் இளம்வழுதி, ராஜகோபால், முன்னாள் கவுன்சிலர் லேசு, முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் பாண்டியராஜன், தேசிங்கு உள்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில், குடிநீர் பற்றாக்குறை, பேருந்து வசதி, முதியோர் உதவித் தொகை ஆகியவை வழங்கக் கோரி பொது மக்கள் மனு கொடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT