விழுப்புரம்

காவல் உதவி ஆய்வாளர் மீது புகார்

தினமணி

செஞ்சி காவல் உதவி ஆய்வாளர் இளைஞரைத் தாக்கியதாக எஸ்.பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் மனு அளித்தனர்.
 செஞ்சி அருகேயுள்ள மேளச்சேரி புதுக்குளக்கரை இருளர் பகுதியைச் சேர்ந்த சேகர், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இருளர் சமூகத்தைச் சேர்ந்த நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனது மகன் ராஜா கடந்த
 10-ஆம் தேதி காலை செஞ்சி பேருந்து நிலையத்தில், அவரது நண்பர்கள் குமார், நாகராஜ் ஆகியோருடன் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த செஞ்சி காவல் உதவி ஆய்வாளர் அசோகன், நாகராஜை கன்னத்தில் அறைந்துள்ளார்.
 இதனை தட்டிக்கேட்ட ராஜா உள்பட 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளார். பின்னர், அங்கிருந்து 3 பேரையும் அனுப்பியுள்ளார். அவர்கள் 3 பேரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
 பலத்த காயமடைந்த ராஜா விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இவர்கள் மீது தாக்குதல் நடத்தி, மிரட்டல் விடுத்த உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT