விழுப்புரம்

மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் சாவு

DIN

சாலையில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்தவர் சின்னப்பன் மகன் மாதையன் (60). கோழிக்குஞ்சு விற்பனை செய்யும் வியாபாரி. இவர், கடந்த வியாழக்கிழமை தியாகதுருகத்திலிருந்து விருகாவூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மாதையனுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த திருக்கோவிலூர் வட்டம், கொனக்கலவாடியைச் சேர்ந்த தயாளன் மகன் மணிகண்டன் (18), அவர் மீது மோதினாராம். இதில் பலத்த காயமடைந்த மாதையன், கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து தியாகதுருகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT