விழுப்புரம்

எஸ்.ஐ. உள்பட 3 காவலர்கள் பணியிட மாற்றம்

DIN


சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உள்பட 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
சென்னை-கும்பகோணம் சாலை ரோந்து வாகனத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், காவலர் இளங்கோ ஆகியோர் கோலியனூர் ரயில்வே கடவுப்பாதை பகுதியில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.
இதன் பேரில், ஹரிகிருஷ்ணன், இளங்கோ ஆகியோரை
ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
இதேபோன்று, பணியை முறையாக செய்யாமல் மது போதையில் இருந்ததாக, ரிஷிவந்தியம் தலைமைக் காவலர் சுந்தரவதனம் மீது புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவரும் ஆயுதப்
படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT