விழுப்புரம்

சமூக சமத்துவப் படை சார்பில் மக்கள் மனுநீதி நாள் முகாம்

DIN

உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் சமூக சமத்துவப் படை கட்சி சார்பில் மக்கள் மனுநீதி நாள் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சமூக சமத்துவப்படை நிறுவனர் சிவகாமி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். பின்னர், அவர் பேசியதாவது: 
சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் ஏழை, எளிய உழைக்கும் மக்களாகிய தாழ்த்தப்பட்ட,  இருளர் சமுதாய மக்கள் வீட்டுமனைப் பட்டா, மயானப் பாதை, முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை கோரி விண்ணப்பம் அளித்தும் கிடைக்காத அவல நிலையில் உள்ளனர். ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில் முறையாக வேலைவாய்ப்பு வழங்குவதில்லை. மாறாக, பெரும் விவசாயிகளிடம் இயந்திரம் மூலம் நிலத்தைச் சீரமைக்கக் கூறி, ஏழை மக்களுக்கு வேலை கொடுத்தது போல நிதியைச் சுரண்டுகின்றனர். தேர்தல் காலத்தில் கவர்ச்சிகரத் திட்டங்களை அறிவித்து, பணத்தை கொடுத்து வாக்கு கேட்டு வரும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

SCROLL FOR NEXT