விழுப்புரம்

மின்னல் பாய்ந்து விவசாயி சாவு

DIN

செஞ்சி அருகே மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார்.
 விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுகடம்பூரைச் சேர்ந்தவர் சாமிநாதன்(53), விவசாயி. இவர், ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் உள்ள தனது நிலத்துக்கு விவசாயப் பணிக்கு சென்றார். 
மாலையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, சாமிநாதன் மீது மின்னல் பாய்ந்தது. இதில், பலத்த காயமடைந்த அவர், செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அன்றிரவு அவர் உயிரிழந்தார். செஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

SCROLL FOR NEXT