செஞ்சி அருகே மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுகடம்பூரைச் சேர்ந்தவர் சாமிநாதன்(53), விவசாயி. இவர், ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் உள்ள தனது நிலத்துக்கு விவசாயப் பணிக்கு சென்றார்.
மாலையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, சாமிநாதன் மீது மின்னல் பாய்ந்தது. இதில், பலத்த காயமடைந்த அவர், செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அன்றிரவு அவர் உயிரிழந்தார். செஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.