விழுப்புரம்

பூட்டிய வீட்டில் நகைகள் திருட்டு

DIN

கள்ளக்குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். 
கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் வசிப்பவர் பாண்டுரங்கன் (51), லாரி ஓட்டுநர். இவரது மனைவி சரஸ்வதி. இவர்கள் இருவரும் சென்னையில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காகச் சென்றிருந்தனர்.
இந்த நிலையில், பாண்டுரங்கனின் நண்பர் ராஜா, அவரை பார்ப்பதற்காக வியாழக்கிழமை வீட்டுக்குச் சென்றார். அப்போது, அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்படிருந்தைக் கண்டு, பாண்டுரங்கனுக்கு செல்லிடப்பேசி வாயிலாக தகவல் தெரிவித்தார்.
பாண்டுரங்கன் தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், அறையில் இருந்த தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை காணவில்லையாம்.
இது குறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT