விழுப்புரம்

"வாக்கு விற்பனைக்கு அல்ல' விழிப்புணர்வுப் பிரசாரம்

DIN

"எனது வாக்கு விற்பனைக்கு அல்ல' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி அனந்தபுரம், உமையாள்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விக்கிரவாண்டி வட்ட நுகர்வோர் கண்காணிப்புக் குழு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, குழு உறுப்பினர் அ.ஜேசுஜுலியஸ் ராஜா தலைமை வகித்தார். சிவராஜ் நர்சிங் இன்ஸ்டிடியூட் முதல்வர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல' 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கர் ஒவ்வொரு வீட்டின் கதவிலும் ஒட்டப்பட்டது. நுகர்வோர் கண்காணிப்புக் குழு, ரோட்டரி சங்கத்தினர்,  செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.  உமையாள்புரம் ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, ஆசிரியர் லட்சுமணமூர்த்தி, பிரியா, ரோட்டரி மதிவாணன், சௌகர், முன்வர்அலி, அஜீஸ், ஜெயக்குமார், அலீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT