விழுப்புரம்

காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

DIN

மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டையில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 அவலூர்பேட்டை கிழக்கு எல்லையில் உள்ள காளியம்மன் கோயிலின் எதிர்புறம் அரச மரத்தடியில் காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. 
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் காலபைரவருக்கு  பல்வேறு வாசனைத் திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. 
மேலும் காளியம்மன், பிடாரி அம்மன், தட்சணாமூர்த்தி, நாக தேவதைகளுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் 
தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT