விழுப்புரம்

குடிநீர்த் தொட்டி இயக்கி வைப்பு

DIN

மயிலம் தொகுதிக்கு உள்பட்ட பெரப்பேரி ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சிறு மின்விசை குடிநீர்த் தொட்டி இயக்கி வைக்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நீதி மூலம் பெரப்பேரி ஊராட்சியில் பொது மக்களுக்கு சிறு மின்விசைக் குடிநீர்த் தொட்டி ரூ. ஒரு லட்சத்து 40 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டது. 
இதன் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. தொகுதி எம்.எல்.ஏ இரா.மாசிலாமணி தலைமை வகித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக குடிநீர்த் தொட்டியை இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திமுக ஒலக்கூர் ஒன்றியச் செயலர் ராஜாராம், ஊராட்சிச் செயலர் சாமுவேல், நிர்வாகிகள் திருஞானசம்பந்தம், நீலகண்டன், வீரப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT