விழுப்புரம்

காய்கனி பதனிடுதல் பயிற்சி

DIN

திருக்கோவிலூர் கலை, அறிவியல் கல்லூரியில் காய்கள், பழங்கள் பதனிடுதல் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
 முகாமுக்கு, கல்லூரிச் செயலர் ஈ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.முஸ்தாக்
 அகமது, முதல்வர் டி.எஸ்.வீரமணி, நிர்வாக அலுவலர் ஆர்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேதியியல் துறைத் தலைவர் ஜி.மணிகண்டன் வரவேற்றார்.
 முகாமில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் எஸ்.கண்ணன், கடலூர் மண்டல வேளாண் உதவி இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று காய்கள், பழங்களை எவ்வாது பதனிடுவது, மண்புழு உரம் தயாரிப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
 ஏற்பாடுகளை இயற்பியல் துறைத் தலைவர் ஜெ.சந்திரசேகர் செய்திருந்தார். வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் பி.புருஷோத்தமன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிராம பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

SCROLL FOR NEXT