விழுப்புரம்

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

செஞ்சி வட்டம், அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் சார்பில், நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

செஞ்சி வட்டம், அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் சார்பில், நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் அ.ஆனந்தன் தலைமை வகித்தார். அனந்தபுரம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பழனி பேரணியை தொடக்கிவைத்தார்.  நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் க.ஏழுமலை நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு குறித்துப் பேசினார்.
மாணவர்கள் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி அனந்தபுரம் பேரூராட்சியின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பேருந்து நிலையத்தை அடைந்து, மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். ஆசிரியர்கள் அர.சண்முகம், ஆ.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT