விழுப்புரம்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம்

DIN


திருவெண்ணெய்நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், 4888 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 பணம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சியில் பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் ராமலிங்கம் கலந்துகொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் காண்டீபன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் நாகவள்ளி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வங்கிச் செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். 
ஒன்றிய இணைச் செயலாளர் சிவகாமி முருகதாஸ், நகரச் செயலாளர் கேசவன், நகரத் தலைவர் வேலாயுதம், கூட்டுறவு சங்க தலைவர்கள் பாபு, செல்வமுருகன், துணைத் தலைவர் முருகன், இயக்குநர்கள் தங்க கலியபெருமாள், உஷா, கன்னியம்மாள், நகர எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் சுந்தரம் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் 
கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT