விழுப்புரம்

பள்ளியில் சமத்துவ பொங்கல்

DIN

கள்ளக்குறிச்சி ஆர்.சி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் திருவிழாவுக்கு பல்லவன் கிராம வங்கியின் மேலாளர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார்.  
பள்ளியின் தாளாளர் எல்.ஜோசப்ராஜ் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் மாகோலமிட்டு புதுப்பானை மற்றும் கரும்பு, மஞ்சள் கொத்துடன் அலங்கரித்தனர். 
அதனை அடுத்து பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர். 
இக் கல்வி ஆண்டின் இரண்டாம் பருவத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 
 கள்ளக்குறிச்சி ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற
னர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT