விழுப்புரம்

செஞ்சி கோதண்டராமர் கோயிலில் ஸ்ரீராம பஜனை

DIN


செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயிலில் ஸ்ரீராம பஜனை சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஸ்ரீகோதண்டராமர், ஸ்ரீநரசிம்மப்பெருமானுக்கு அபிஷேகம், ஆராதனைகள், சிறப்பு பஜனை நடைபெற்றன. எம்.ராமமூர்த்தி ராமானுஜதாசர், திருமால் வணக்கத்துடன் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார். அறக்கட்டளை நிர்வாகி துரை.பாரதிராஜா முன்னிலை வகித்தார்.
சபைத் தலைவர் வி.ஜெயராமதேசிகர் தலைமை வகித்தார். ஜனார்த்தன தேசிகர், எம்.ராஜி, ஆர்.அனந்தவிஷ்ணு, ஆதிகேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சன்மார்க்க வில்லுப் பாட்டுக் கலைஞர் நடுப்பட்டு ப.புருஷோத்தமன் மற்றும் கொங்கரப்பட்டு, மொடையூர், சிட்டாம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பஜனைக் குழுவினர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீராம ஆஞ்சநேயா பக்த ஜன சபா மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

SCROLL FOR NEXT