விழுப்புரம்

சாலையோர மரங்களில் விபத்து தடுப்பு பிரதிபலிப்பான்கள்

DIN


விபத்துகளை தடுக்கும் பொருட்டு, தியாகதுருகத்தில் பாவந்தூர் சாலையோர மரங்களில், இரவில் ஒளிரும் தன்மை கொண்ட பிரதிபலிப்பான்களை காவல் துறையினர் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். 
தியாகதுருகம் காவல் நிலைய ஆய்வாளர் குமார் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் சூ.பாலமுரளி மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் தியாகதுருகத்தில் இருந்து பாவந்தூர் செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள மரங்களில் இந்த பிரதிபலிப்பான்களை பொருத்தினர். இதன் மூலம், இரவு நேரங்களில் இந்த சாலையில் வாகன விபத்து பெருமளவு தவிர்க்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT