சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் சிட்டுக் குருவிகள் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, வள்ளலார் மன்றத் தலைவர் ஜே.பால்ராஜ் தலைமை வகித்தார். மன்றச் செயலர் இரா.நாராயணன், இன்னர்வீல் கிளப் தலைவர் கோ.சரவணதேவி, ஓய்வூதியர் சங்கத் தலைவர் கு.கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் இராம.முத்துக்கருப்பன் வரவேற்றார். ரோட்டரி அறக்கட்டளைத் தலைவர் ஆர்.வி.ஜனார்த்தனன் பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கினார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் சி.வள்ளி நன்றி கூறினார்.